ஆடு,
பிராய்லர் கோழி, மீன், காடை, நண்டு என பல்வேறு இறைச்சி வகைகள்
இருந்தாலும், அசைவ பிரியர்கள் அதிகம் விரும்புவது நாட்டுக் கோழியை தான்.
அதன் சுவையே தனி. நினைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறும்!!
பண்ணை
அமைத்து இக்கோழிகளை கவனத்துடன் வளர்த்தால், நல்ல லாபம் குவிக்கலாம்’
நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால்
தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய
இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற
முடியும்.கிராமங்களில் அனைவரின் வீட்டிலும் 15 வருடங்களுக்கு முன்பு கோழி
வளர்ப்பது வழக்கம் அப்போது கோழி என்றால் அது நாட்டுக்கோழி மட்டுமே
காலப்போக்கில் பிராய்லர் கோழி வந்த பிறகு நாட்டுக்கோழியுன் தாக்கம்
குறைந்தது அதற்கு காரணம் வீட்டில் கோழி வளர்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து
விட்டது. இதனால் பண்ணைகளில் வளர்க்கும் கோழிகள் மக்கள் சாப்பிடுவதற்கு
அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆட்டிறைச்சியின் விலை அதிகமாக அதிகமாக
பிராய்லர் கோழியின் விற்பனை அதிகரித்தது.
பிராய்லர்
கோழியை விட நாட்டுக்கோழி தான் சிறந்தது என்பதால் கடந்த சிலவருடங்களாக
நாட்டுக்கோழிக்கு மதிப்பு அதிகரித்தது. அது கிடைப்பது சுலபமல்ல என்பதால்
ஆட்டிறைச்சிக்கு ஈடான விலையில் தற்போது நாட்டுக்கோழி விற்பனை ஆகிறது..
பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம்.
விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே
தொழிலாக செய்தால் நல்ல பார்க்கலாம். கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம்
மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி
வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 3 மணி நேரம் பராமரிப்புக்கு
செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து
வாங்கி வந்து வளர்க்கலாம்.
முட்டையாக
வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி
செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின் (ரூ.2 லட்சம்), அடை
காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் (ரூ.75 ஆயிரம்) தேவைப்படும்.
புதிதாக தொழில் துவங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் குஞ்சுகளாகவே வாங்கி
வளர்ப்பது எளிதானது.பராமரிப்பு முறைகள்.
பண்ணை
வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது.
அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம்
உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள் இல்லாமல்
இருப்பது கோழிகளுக்கு நல்லது. பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும்
வெடிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும்
பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள் கோழிகளை பாதிக்காது.
முதல் 48 நாட்களுக்கு புரதசத்து அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு
தர வேண்டும். 48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை
கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி
பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம்
போன்றவற்றை பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல்
கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல்
கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசியும்
அதிகரிக்கும்.
அதிகம்
காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம்
உள்ள கெட்டியான தகடால் வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள்
இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள் ஒரு அடி உயரத்தில்
100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300
குஞ்சுகளுக்கு 100 வாட் பல்பு மூன்றும், குளிர்காலத்தில் நான்கும்
பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச்
உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க
வேண்டும். அதனுள் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும்.
அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்ற வேண்டியது
அவசியம்.
அறையில்
20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்ற
வேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது
மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும்.
இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும். கோழிகள்
ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30
நாட்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60
நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள் பூர்த்தியானதும், சேவல்களை
உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள்
வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மேல் வளர்த்தால்
தீவனச் செலவு அதிகமாகும்.
குஞ்சு
பொரிப்பு பண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள்
குஞ்சு வளர்ப்புக்கு தகுதியற்றது. இதர முட்டைகளில் எடை குறைவு, ஒழுங்கற்ற
அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும். மற்ற முட்டைகளை இன்குபேட்டர்
மெஷினில் 19 நாட்கள் 100 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 90 டிகிரி
சென்டிகிரேடு ஈரப்பதம் உள்ளவாறு வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 15 ஆயிரம்
முட்டைகளை வைக்கலாம். பின்னர் கேட்சர் மெஷினில் 3 நாள் வைத்தால் முட்டைகள்
பொரிந்து குஞ்சுகள் வெளிவரும்.
கட்டமைப்பு
கோழி வளர்க்கும் திட்டம்
ஆயிரம்
கோழி வளர்க்க ஆயிரம் சதுர அடி கொண்ட ஷெட் அமைக்க ரூ.70 ஆயிரம், தீவன
பக்கெட் மற்றும் தண்ணீர் பக்கெட் 10க்கு ரூ.1000. குஞ்சுகள் ஈரோடு மாவட்டம்
சின்னியம்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, புதூர், சாலைப்புதூர், திருப்பூர்
மாவட்டம் பல்லடம், பொங்கலூர் மற்றும் கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின்
ஒரு சில இடங்களில் கிடைக்கின்றன. இன்குபேட்டர் மற்றும் கேட்சர் மெஷின்
ஐதராபாத்திலும், பண்ணை மற்றும் தீவனப்பொருள்கள் கோவை, ஈரோடு, திருப்பூர்,
கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் வாங்கலாம்.
முதலீடு
ஆயிரம் கோழி குஞ்சுகள் ரூ.28 ஆயிரம், 3.5 டன் தீவனம் ரூ.66,500, பராமரிப்பு
கூலி ரூ.15 ஆயிரம், மின்கட்டணம் ரூ.12 ஆயிரம் என 3 மாதத்துக்கு ஒரு முறை
மொத்த செலவாக ரூ.1.22 லட்சம் ஆகிறது. கோழிப்பண்ணை அமைக்க வங்கிகளில்
கடனுதவி பெறலாம். தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் 240 பேருக்கு
நாட்டுகோழி வளர்ப்பு திட்டத்தில் பயனடைய பயனாளிகளிடம் விண்ணப்பம்
பெறப்படுகிறது. உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.
வருமானம் ஆயிரம் கோழிகள் வளர்த்தால் 30 கோழிகள் வரை இறக்க வாய்ப்பு உள்ளது.
970 கோழிகள் நல்லமுறையில் வளரும். 80 நாள் வளர்த்தபின் விற்பனைக்கு
தயாராகும். அப்போது ஒரு கோழியின் சராசரி எடை 1 கிலோ 400 கிராம் வீதம் 1358
கிலோ எடையுள்ள கோழிகளை விற்கலாம். ஒரு கிலோ சராசரியாக ரூ.125க்கு குறையாமல்
விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1.7 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில்
லாபம் ரூ.48 ஆயிரம். சராசரியாக மாத லாபம் ரூ.16 ஆயிரம்.
சந்தை வாய்ப்புஇறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கி
செல்வார்கள். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விழாக்கள்,
விசேஷங்களுக்கு மொத்தமாகவும் வாங்குவார்கள். ஓட்டல்கள், உணவு
விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம்.
கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது திருவண்ணாமலை மாவட்டத்தில்!
கோழி வளர்க்கும் திட்டம்
கோழி
பண்ணை வளர்ப்பில் முன்னோடியாக விளங்கும் நாமக்கல், ஈரோடு, திருப்பூர்
மற்றும் கோவை மாவட்டங்கள் போல பிற மாவட்டங்களிலும் கோழி வளர்ப்பினை ஊக்கு
விக்கும் பொருட்டு தமிழக அரசால் 2013-2014ம் ஆண்டு இத்திட்டம் முதன்முறையாக
செயல்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை
மாவட்டத்தில் இத் திட்டம் 240 நபர்களுக்கு ரூ.70 லட்சத்து 25 ஆயிரம்
மதிப்பீட்டில் செயல்படுத்தப் பட்டது. மேலும் இத்திட்டம் தமிழகத்தில் ரூ.25
கோடி மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டில் செயல் படுத்தப் பட உள்ளது.25
சதவீதம் மானியம்.
இத்திட்டத்தின்
கீழ் கறிக்கோழி மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு தமிழக அரசு சார்பில் 25
சதவீத மானியமும், நபார்டு வங்கி மூலம் கோழிக்கான முதலீட்டு நிதியில்
இருந்து 25 சதவீத மானியமும் ஆக மொத்தம் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்பட
உள்ளது. மீதமுள்ள 50 சதவீதத்தை பயனாளிகள் தங்கள் சொந்த செலவிலோ அல்லது
வங்கியிலிருந்து கடனாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
நபார்டு வங்கியின் 25 சதவீத மானியத்தை பெறு வதற்கு பயனாளிகள் வங்கியில் இருந்து கடன் பெற்றிருக்க வேண்டும்.
மேலும்
நாட்டுக்கோழி வளர்ப்பினை ஆண்டு முழுவதும் ஊக்குவிக்கும் பொருட்டு,
இரண்டாம் தொகுப்பு கோழிக் குஞ்சுகள் வாங்கும் செலவில் 50 சதவீத மானியமும்
(ரூ.3,125), மூன்றாம் தொகுப்பு கோழிக் குஞ்சுகள் வாங்கும் செலவில் 30 சதவீத
மானியமும் (ரூ.1,875) தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.
மேலும்
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர், சுய
உதவிக்குழுக்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட தகுதியானர்கள் இவர்களிடம்
கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்
பெயரிலோ இருத்தல் வேண்டும். கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும்,
ஏற்கனவே கொட்டகை அமைத்த பயனா ளிகள் புதிய கொட்டகை அமைத்து பண்ணையை
விரிவாக்கம் செய்ய ஆர்வ முள்ளவர்களும் இத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
தேர்வு
செய்யப்படும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழக பயிற்சி மையத்தின் மூலம் 5 நாட்களுக்கு கோழி வளர்ப்பு முறை
குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும் மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன்
கறிக்கோழி வளர்ப்பிற்கும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும்,
ஆர்வமும் உள்ள வர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வங்கிகளில் கடன்
வழங்குவதற்கான ஒப்புதல் கடிதம் வங்கி மேலாளரிட மிருந்து பெற்று, அப்பகுதி
கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப் பித்து பயன்பெறலாம்.
மேலும் அப்பகுதி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப்பித்து
பயன்பெறலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயனா
ளிகள் தேர்வு செய்யப்பட உள்ள னர்.
நாட்டுக்கோழிக் கொழம்பு
நாட்டுக்கோழி
வறுவல் அல்லது குழம்பு வைப்பது ஒவ்வொருவருக்கும் ஒரு கைப்பக்குவம்
சங்கவின் கைபக்குவத்தை செய்து பார்க்க முயற்சி செய்யுங்கதேவையான பொருட்கள்:
சிறிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 2
தேங்காய் 1/2 மூடி
கறிவேப்பிலை - 6 கொத்து
கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு தேவைக்கு ஏற்ப
இஞ்சி, பூண்டு தேவைக்கு ஏற்ப
பட்டை,
கிராம்பு, சோம்பு தேவைக்கு ஏற்பபாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன்
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்க வேண்டும். பின்
அதில் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி தோல் உறியும் வரை வதக்க வேண்டும்.
அதிலேயே தேங்காய், மல்லித்தூள், மிளாகய்தூள், மஞ்சள் போட்டு இறக்கி ஆற
வைத்து அம்மியில் அரைக்கவும் ( மிக்சியை விட அம்மி சுவை நன்றாக இருக்கும்)
ஒரு மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
மஞ்சள், தூள், கரம் மசாலா தூள், கோழி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கோழித்துண்டுகள் கொஞ்சம் வேகும் வரை வதக்க வேண்டும.
அரைச்சமசாலா சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கறி நன்கு வேக விடவும் குழம்பு கொஞ்சம் தண்ணியாக வைக்கவும்.
கொத்தமல்லி தூவி இறக்கவும்.. இப்ப ஆவி பறக்கும் நாட்டுக்கோழிச்சாறு
தயார்.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய்,
கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி அதில் கோழிகறியை மட்டும் தனியாக
எடுத்துபோட்டு வதக்கவும்.
வதக்கும் போது கொஞ்சம் கோழி கொழம்பை ஒரு 5 கரண்டி ஊற்றி வதக்கி பெப்பர் போட்டு நன்கு கிளறவும்.இப்போது நாட்டுக்கோழிவறுவல் தயார்
சூடான இட்லியை இலையில் போட்டு நாட்டுக்கோழி கொழம்பு ஊற்றி பிசைந்து
சாப்பிடவும் அன்று முழுவதும் அந்த மனமே இருக்கும்.உடனடி நாட்டுக்கோழி
வறுவல்.
ஒரு
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்று வெங்காயம்,
தக்காளி, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.இத்துடன்
கோழித்துண்டுகள், தேங்காய் துண்டுகள் போட்டு கிளறவும். பின் கடையில்
விற்கும் சிக்கன் மசலா பாக்கெட்டை கொட்டி நன்கு வேக விடவும் இப்பொழுது
உங்களுக்கு உடனடி நாட்டுக்கோழி வறுவல் ரெடி.
No comments:
Post a Comment